Advertisement



  • பிரபாகரனை கொலை செய்யுமாறு ராஜீவ் காந்தி உத்தரவிட்டார் – சிறில் ரணதுங்க :

                                                                                                                                                                        



    தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை படுகொலை செய்யுமாறு இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி இந்திய அமைதி காக்கும் படையினருக்க உத்தரவு பிறப்பித்திருந்தார் என முன்னாள் இராணுவ ஜெனரல் சிறில் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

    இருபது வருடங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

    1987ம் ஆண்டு இந்திய அமைதி காக்கும் படையினரின் முகாம்களுக்கு பிரபாகரன் வருகை தந்த போது அவரை படுகொலை செய்யுமாறு ரஜீவ் காந்தி உத்தரவிட்டதாக, சிறில் ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

    அண்மையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

    இந்தியாவின் பிழையான அணுகுமுறைகளினாலேயே இந்த யுத்தம் இரண்டு தசாப்த காலமாக நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos