Advertisement



  • எமக்குவேண்டியது தமிழர்களின் உரிமைகள் மட்டுமே, அதை யார் பெற்றுத்தருகின்றார்கள் என்பது முக்கியமல்ல!!!

    புலிகளின் கப்பல் விமானம் போன்ற போர்தளவாடங்கள் மற்றும் வாகனங்கள் போன்ற ஏனைய பொருட்கள் போரிற்கு முன்னரே வேறு நாடுகளுக்கு அதாவது புலிகளுக்கு உதவிரவுகின்ற அல்லது புலிகள் உதவிவழங்குகின்ற நதாடுகளுக்கக் கொண்டு செல்லப்பட்டன. அவை குறித்த நேரத்தில் திரும்பி வருவதிலும் தகுந்த வெளிநாட்டுத் தொடர்பில் ஏற்பட்ட தாமதமும் இலங்கை அரசுக்கு பன்னாட்டு ஆதரவும் இப்போரை புலிகளின் பால் தோல்வியடையச்செய்தது.

    மக்களுக்கோ இலங்கை அரசிற்கோ தெரிந்ததிலும் பார்க்க புலிகளின் சர்வதேசத்தொடர்பு மிக அதிகம். இந்திய பிரதமர் கொலைசெய்யப்பட்டதற்கும், இலங்கையில் ஈழப்போரிற்கும் தொடர்பில்லை. கொலையின்மூலம் மென்மேலும் இந்தியாவிடம் பகையினைச்சந்திப்போம் என்று தெரிந்திருந்தும், இக்கொலை இடம்பெற்றமைக்குக்காரணம்??? இந்தியா ஆசியாவின் வல்லரசு… பலம்பொருந்திய நாடு. அந்நாட்டின்வளர்ச்சியில் பெரிதும் ஆர்வமாக இருந்தவர் அமரர் ராஜீவ்காந்தி, எனவே அவரின் மரணம் பலருக்கு நிம்மதிப்பெருமூச்சினை விடச்செய்தது. அதற்குப்புலிகள் உடந்தையாக இருந்ததனால் அவர்களுக்கு ஏற்பட்ட நன்மை என்ன???

    ஆசியாவில் மட்டுமல்ல ஏனைய நாடுகளிலும் அடிப்படைவசதியில்லாமல் போராடும் போராட்ட அமைப்புக்கள் இருக்கின்றன… 25வருடங்களுக்கு முன்னரே பல்வேறு நாடுகளில் இராணுவப் பயிற்சியைப் பெறுமளவிற்கு எமது போராட்டக் குழுக்கள் இருந்தனர் என்றால், புலிகளுக்கு பணத்தடை இல்லாது இருக்கும் போது அவர்களுக்கு எத்தகைய தொடர்பு இருந்திருக்கும்.

    அதுமட்டுமல்லாது, புலத்தில் இருக்கும் புலிகள் இயக்கத்தவர்கள் வசதிவாய்ப்போடு உல்லாசமாக சுகபோக வாழ்வை மேற்கொண்டு வந்தபோது, ஈழத்தில் போராடுவோர் அங்கேயே போராடி மடிந்துகொண்டிருந்தனர். அதிலும் குறிப்பிட்டபிரதேசத்தவர் போராடும்போது, மற்ற பிரதேச போராளிகள் பெருமைகளையும் ஆழுமையினையும் மேற்கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

    ஆரம்பத்தில் விக்ரர் மன்னார்ப் பிரதேசத்திற்குப் பொறுப்பாக இருந்தபோது, அவருடைய போர்த்தந்திரம் மற்றும் போராளிகளின் பலம் சொல்லொண்ணாதவை.

    இன்னொருபுறம் எமது பார்வையினைச் செலுத்துவோம். தமிழ்த் தேசியம் - ஆரம்பகால தமிழர்களின் கடவுச்சீட்டில், இனம் இலங்கைத்தமிழ் என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் தற்போது, இலங்கையர் என்று மட்டும் குறிப்பிடப்படுகின்றது. இதேவேளை வெளிநாடுகளில் வெளிநாட்டுத்தேசியத்தைப் பெற்றுக் கொள்வோர்கள், தமது கடவுச்சீட்டில் இலங்கை தமிழ் ஜேர்மானியர், இலங்கை தமிழ் பிரித்தானியர், இலங்கை தமிழ் இத்தாலியர், இலங்கை தமிழ் நோர்வேஜியன், இலங்கை தமிழ் கனேடியர்… என்று பிரிவிட்டுக்காட்டியதில்லை. அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதோடு பெருமையாகவும் “ எனக்கு வெளிநாட்டு பாஸ்போட்” என்று மார்தட்டுகின்றோம். ஏன் இங்கும் எமது அடிப்படைத்தேசியம் குறிக்கப்படவில்லை என்று உங்கள் ஆர்ப்பாட்டம் தொடரவில்லை!

    இலங்கையில் எல்லா உரிமைகளும் இருக்கின்றன… நாம் தான் அவற்றைக் கோட்டைவிட்டோம். விடுதலைப்புலிகள் ஆரம்பத்தில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டிருந்தால், இழப்புகளைத் தவிர்த்திருக்கலாம்.

    தற்போது வடக்கில் சிங்களவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளமைக்குக் காரணம் புலிகளே!!!

    பௌத்த குருமார்கள் அடிக்கல் நாட்டுகின்றனர்… சிங்கள அமைச்சர்கள் முக்கிய விடயங்களில் பங்குபெறுகின்றனர்… இங்கு தமிழ்க்கலாசாரம் எங்கே? தமிழ் அமைச்சர்கள் எங்கே? தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எங்கே? இந்து மற்றும் கிறீஸ்தவ மதகுருமார்கள் எங்கே? இதனால்தானே போராட்டம் தொடங்கியது…!!! இதற்கு ஆயுதம் தேவையில்லை, அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் அதிகாரிகள் அகிம்சையில் குரல்கொடுத்தால் போதுமானவை. அப்படியும் குரல்கொடுக்கவில்லை என்றால் அனைத்து தமிழ்க்கட்சிகளும் இந்த விடயத்தில் இணைந்து குரல்கொடுக்கவேண்டும்… தற்போது மனோகணேஷன் கொடுக்கின்ற குரலிலும் பார்க்க புலிகள் மக்களுக்காகக் கொடுக்கின்றகுரல் தளர்ந்துவிட்டது. இது இப்படியிருக்க, மேற்சொன்ன விடயத்திற்கு மீண்டும் கொண்டுசெல்கின்றேன்… தமிழீழப் போராட்டத்தில் பிடிவாதமாக உள்ளவர்கள் இரண்டுதேசியத்தை உடையவராக இருக்கவேண்டும் அல்லது, தனி இலங்கைத் தேசியத்திலேயே இருக்கவேண்டும்… காரணம் நான் தமிழீழத்தான் தமிழீழத் தேசியத்தை உடையவன். எப்போதும் எந்த தேசியத்தையும் பெற்றுக்கொள்ளமாட்டடேன் என்று அடம்பிடிக்கவேண்டும்.

    எமது தேசத்தில் உள்ள தேசியத்தில் திருத்தங்களை ஏற்படுத்த மனமில்லாதவர்கள் அன்னியனிடம் மண்டியிட்டு அவனுடைய தேசியத்தை பெற்றபின்னர், அந்த தேசியத்திற்கு எப்படி நம்பிக்கையாக இருப்பார்கள்…??? அப்படி அந்நிய தேசதேசியத்திற்கு நம்பிக்கையாக இருப்பவர்கள் எப்படி தமிழ்த் தேசியத்திற்காகப் போராடுவார்கள்??? அதனை எப்படி அந்நாடுகளின் சட்டத்தில் ஏற்றுக்கொள்ளமுடியும்… தமது தேசியத்திற்கு குந்தகம்விளைவிப்பவர்கள் இலங்கையர் என்று விண்ணப்பங்களை ஒதுக்கமாட்டார்களா??? தேசியம் வழங்குவதனை நிராகரிக்கமாட்டார்களா? சட்டத்தால் தடுக்கமாட்டார்களா???

    நியாயம் கேட்பதற்காக புலத்தில் ஊர்வலங்கள் மேற்கொண்டபோது, பலதமிழர்களுக்கு பிறநாட்டுக் காவலாளிகள் தடியடிகொடுத்தனர், மறியலிலும் வைத்தனர்… ஊர்வலங்களுக்குத் தடையும் விதித்தனர். நீதி கோரும் இடத்திலே இத்தகைய நிலையிருக்க, இலங்கையில் வன்முறையில் சட்டத்திற்குப்புறம்பாக எமது செயற்பாட்டை மேற்கொண்டால் எப்படியிருக்கும்.

    இப்படியிருக்க புலத்தில் தேவையற்வ விடயங்களில் ஈடுபட்டமைக்குப்பதிலாக அகத்தில் ஏன் இப்போராட்டங்களை தொடர்ந்து மேற்கொள்ளக்கூடாது… “இப்ப இலங்கையில செய்தால் தடாதான்” என்று ஒதுக்கத்தேவையில்லை இப்பவும் அதற்கெல்லாம் முறையுண்டு…

    அதற்கு முதலில் தற்போதைய அரசிற்கு அதிகாரியாக இருப்பவர்களுக்குத் தூபங்காட்டவேண்டும். மக்களால் தெரிவுசெய்யப்பட்டுபதவியில் இருப்பவர்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். அவர்கள் நன்மைதான் செய்வார்கள் என்று நம்பவேண்டும். எப்படி தான்தோன்றித்தனமாகச் செயற்பட்ட விடுதலைப்புலிகள் மக்களுக்கு விடுதலை பெற்றுத்தருவார்கள் என்று நம்பினோமோ அதனிலும் மேலாக மக்களின் விருப்பங்களை நம்பவேண்டும்.

    புலிகளின் பெயரில் என்ன இருக்கிறது… இப்போதும் அதன் தடைகளை நீக்கச்சொல்லி பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக, மக்களின் எதிர்காலத்திற்கு எது அவசியமோ அதை செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். அதுசரி, புலிகளின்பெயரில் பல சொத்துக்கள் இருந்தால் அதை மீட்பதில் அதனைச் சார்ந்தோர் தலைதெறிக்க ஓடுவதில் பிரியமாக இருக்கின்றனர். புலிகளின் பெயர் எமக்குமுக்கியமல்ல எமக்குவேண்டியது தமிழர்களின் உரிமைகள் மட்டுமே, அதை யார் பெற்றுத்தருகின்றார்கள் என்பது முக்கியமல்ல!!!

    இப்போது புரிகின்றது திரு சொல்கைம் விலகியதற்கு காரணம்… இல்லை… இல்லை… விலக்கியதற்குக்காரணம்… அவரின்போக்கு விடுதலைக்கு வழிவகுத்திருக்குமோ இல்லையோ தமிழர்களின் உரிமைகளுக்கு வழிகுத்திருக்கும் என்பதில் ஐயமில்லை –

    புலத்தான்

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos