Advertisement



  • சென்னை நட்சத்திர கலைவிழா நயன்தாரா திடீர் வருகை: பிரபுதேவா மனைவி மிரட்டலால் பரபரப்பு


    பிரபுதேவா, நயன்தாரா காதல் ரகசியமாக வளர்கிறது. நயன்தாராவை பார்த் தால் அடிப்பேன் என்று பிரபுதேவா மனைவி ரம்லத் ஆவேசப்பட்டுள்ளார்.

    இதனால் சென்னை வருவதை நயன்தாரா தவிர்த்து வந்தார். “ஆதவன்” பட விழாக்களில் கூட பங்கேற்க வில்லை. கேரளாவில் உள்ள நயன்தாராவின் வீட்டுக்கு போய் நேரில் சண்டை போட ரம்லத் தரப்பினர் முயற்சித்து வந்தனர்.

    இந்த நிலையில் நயன் தாரா நேற்று திடீரென்று சென்னையில் தலை காட்டினார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்று பரபரப்பு ஏற்படுத்தினார்.

    இவ்விழாவுக்காக ஒரு நாள் முன்னதாகவே சென்னை வந்து ரகசிய இடத்தில் தங்கினார். அவர் வழக்கமாக தங்கும் நட்சத்திர ஓட்டல்களில் ரம்லத் ஆள் வைத்து தேடினார். ஆனால் அங்கு அவர் இல்லை. சென்னை வந்திருப்பது உறுதி ஆனால் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லையே என்று குழம்பினார்.

    இந்த நிலையில் இரவு 8 மணிக்கு நயன்தாரா நேருஸ்டேடியத்துக்கு வந்தார். அவரைப் பார்த்ததும் ரசிகர்கள் முண்டியடித்தனர். மேடையின் முன்வரிசை இருக்கையில் போய் உட்கார்ந்தார்.

    அவர் வந்ததும் பிரபுதேவா விழா அரங்கில் இருந்து வெளியேறினார். பிரபுதேவா தந்தைடான்ஸ் மாஸ்டர் சுந்தரம், சகோ தரர்ராஜு சுந்தரம் மற்றும் குடும்பத்தினரும் வெளியேறினார்கள்.

    நயன்தாரா வருவதற்கு முன்பாகவே பிரபுதேவா மேடையில் ஆடி முடித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    நயன்தாரா அருகில் சிம்பு உட்கார்ந்து இருந்தார். இருவரும் பேசிக் கொள்ளவில்லை. சிறிது நேரம் கழித்து திடீரென்று சிம்பு மேடையேறி “லூசுப் பெண்ணே, லூசுப் பெண்ணே” “லூசுப் பெண்ணே” “லூசுப் பையன் உன்னாலே தான்லூசா சுத்துறான்”என்ற பாடலை பாடினார். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

    அப்பாட்டை கேட்டு நயன்தாரா சிரித்தபடி இருந்தார்.

    அதன் பிறகு நயன்தாரா மேடையில் ஏறி சினிமா தொழிலாளர் சங்கத்தினரை வாழ்த்தி விட்டு இறங்கினார்.

    பிரபுதேவா மனைவி ரம்லத்திடீரென்று விழா அரங்குக்கு வரலாம் என்று பரபரப்பு தொற்றிக்கொண்டது. அவரும் வருவதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

    அழைப்பிதழ் இருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஸ்டேடியத்துக்குள் செல்ல முடியாமல் வெளியே தவித்தப்படி நின்றனர். ஸ்டேடியம் நிரம்பி விட்டதாக சொல்லி கேட்டுகளை போலீசார் மூடி விட்டனர். கூட்டத் தினரையும் கலைந்து போகும் படி விரட்டினர். இந்ததகவல் தெரிந்து ரம்லத்தால் வரஇயல வில்லை.

    மேடையில் சினேகா, உன்னை ஒன்று கேட்பேன் என்ற பாடலையும், ஸ்ரேயா கந்தசாமி பாடலையும் பாடினார்கள். பிரபு, விஜய், சூர்யா, அர்ஜூன், திரைப்பட தொழிலாளர் சங்கத்தலைவர் வி.சி.குகநாதன், ஜி.சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos