Advertisement



  • புகலிடம் கோரும் இலங்கையர்களுடன் கடும்போக்கை கனடா கடைப்பிடிக்கும் - குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி

    கனடாவில் புகலிடம் கோருவோர் மீது மென்போக்கு கடைப்பிடிக்கப்படுவதாக நிலவும் அபிப்பிராயத்துடன் அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், நாட்டின் மேற்கு கரையோரத்தில் துருப்பிடித்த படகு ஒன்றில் வந்து சேர்ந்த இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76 பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெவித்துள்ளார்.

    தமிழ் கனடியர்கள் இந்த படகு மக்கள் மீது கருணை காண்பிக்குமாறு கனடிய அதிகாரிகளை வற்புறுத்திவரும் அதேவேளை, இந்த குடியேற்றவாசிகளின் சட்டவிரோத படகுப் பயணம் அதிகரித்து த்து வரும் சட்டவிரோத ஆட்கடத்தல் பிரச்சினையை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது என்று அமைச்சர் கெனடி, தெரிவித்துள்ளார்.

    அநேகமான புகலிடக் கோரிக்கைகள் பொய்யானவை என்று நம்பப்படுவதாகவும் அவை தொடர்பாக கடும் சட்டங்களை கொண்டுவரப் போவதாகவும் கனடாவின் கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.



    இரண்டு வகை குடிவரவு ·றைமைகளை கடைப்பிடிக்கும் நாடு என்ற பெயரைப் பெற்றுக் கொள்ள தாங்கள் விரும்பவில்லை என்று அமைச்சர் கெனடி தெரிவித்தார். கனடாவுக்கு வர பொறுமையுடன் காத்திருக்கும் சட்டஙுதியான, சட்டத்தைமதித்து நடக்கும் குடியேற்றவாசிகள் ஒரு வகையினராகவும் பின் கதவு வழியாக புகலிடக் கோரிக்கை லம் கனடாவுக்கு வர ·யல்வோர் இரண்டாவது வகையினராகவும் இரு வகையினர் இருப்பதை அவர் பேட்டி ஒன்றின் போது சுட்டிக் காட்டினார்.



    புகலிடம் வழங்கும் ·றைமையை துஷ்பிரயோகம் செய்யும் இரண்டாவது வகையினருக்கு குடிவரவுக் கதவை டிவிடுவது சிறந்தது என்று தாங்கள் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.



    புகலிடம் கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் படகு மக்களின் எதிர்காலம் பற்றி தீர்மானிப்பதற்கு இந்த விடயம் நேற்று குடிவரவு அகதிகள் விசாரணை மண்டபத்தில் ஆராயப்பட இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.



    கனடிய குடிவரவு சட்டத்தின் கீழ, தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 48 மணி நேரத்திற்கு ·ன்னதாக அவரது விடயம் விசாரணைக்கு எடுக்கப்பட வேண்டும். இந்த குடியேற்றவாசிகள் கடந்த சனிக்கிழமை இரவு படகிலிருந்து கைவிலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டுள்ளார்கள்.



    இவர்களது வரவினால் கனடாவின் பாரிய தமிழர் ச·தாயம் மிகுந்த அக்கறையுடன் அதன் இரண்டு உறுப்பினர்களை படகு பிடிபட்ட மேற்கு கரையோரத்திற்கு அனுப்பியுள்ளது. ரொறொன்ரோ வழக்கறிஞர் கெ> ஆனந்தசங்கரி குடியேற்றவாசிகளை சந்திக்க வேண்டுமெனக் கோரி கனடிய எல்லைப் பாதுகாப்பு சேவை நிலையத்தின் வன்கூவர் அலுவலகங்களுக்கு திங்கட்கிழமை நேரில் சென்றுள்ளார். ஆனால் அதற்கு அவர் அனுமதிக்கப்படவில்லை. திங்கட்கிழமை அதிகாலை விமானம் லம் வன்கூவர் போய்ச் சேர்ந்த ஆனந்தசங்கரியும் டேவிட் பூபாலப்பிள்ளையும் குடியேற்றவாசிகள் இலங்கையிலிருந்து அவலப்பட்டு வெளியேறிய இளம் தமிழர்கள் என்று நம்புகிறார்கள்.



    அநேகமானோருக்கு இலங்கை இப்போதும் பாதுகாப்பற்ற நாடாகவே இருந்து வருகிறது என்று ஆனந்தசங்கரி தெரிவித்தார். வன்கூவர் தீவிலிருந்து சுற்றுவட்டரத்திலுள்ள தடுப்பு முகாமொன்றுக்கு அழைத்து செல்லப்பட்ட குடியேற்றவாசிகளை செவ்வாய்க்கிழமை சந்திக்க மீண்டும் முயற்சி செய்யப் போவதாக அவர் தெரிவித்தார்.






0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos