-
இலங்கையை தாயகமாகக்கொண்ட பிரபலம் வாய்ந்த அமெரிக்க வர்த்தகர் கைது
பிரபலமான வர்த்தகரென இவர் அடையாளப்படுத்தப்பட்டமை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட அமெரிக்க உளவுப்பிரிவினர் (F.B.I) அவரின் வருவாய்க்கான காரணிகளை கண்டறிந்தனர். அவர்கள் மேற்கொண்ட ஆய்வில் அவர் வர்த்தக மோசடியில் ஈடுபட்டமை தெரியவந்ததற்கமைய அக்குற்றச்சாட்டின் பேரில் இலங்கையரான வர்த்தகர் ராஜ் ராஜரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
உலகப் பிரசித்தி பெற்ற கெலொன் நிறுவனத்தின் உரிமையாளரும், உலக செல்வந்த வரிசையில் 559ஆம் இடத்தை வகிப்பவருமான ராஜ் ராஜரட்னம் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.பங்குச் சந்தை மற்றும் நிதிச் சந்தை கொடுக்கல் வாங்கல்களின் போது மோசடியான முறையில் இலாபமீட்டியுள்ளதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரையில் நடைபெற்ற இவ்வாறான சட்டவிரோத வர்த்தக நடவடிக்கைகளின் மூலம் 20 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானமாக ஈட்டப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் ராஜ் ராஜரட்ணம் அவர்கள் கடந்த மாதம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளின்போது இராணுவத்தினரால் வன்னியில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது அரச படைகளிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி உதவி வழங்குவதாக ராஜரட்னம் ஒப்புக் கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தெருத்தேங்காயை பிடுங்கி வழிப்பிள்ளையாருக்கு தானம் வழங்கும் நிகழ்வாகவே ராஜ் ராஜரட்னத்தின் மனிதநேயப்பணி மறைக்கப்பட்டிருந்தமை இன்று அம்பலமாகியுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: