-
தினமலர் ஆசிரியர் லெனின் கைதுக்கு ரஜினிகாந்த் நன்றி தெரிவிப்பு!
தமிழ்த்திரைப்பட நடிகைகள் பற்றி அவதூறு செய்தி பரப்பியதாக கூறி தினமலர் செய்தியாசிரியர் லெனினை சென்னை மாநகர போலீஸார் நேற்று இரவு அதிரடியாக கைது செய்தனர்.பாலியல் சர்ச்சையில் சிக்கிய நடிகை புவனேஸ்வரி, தென்னிந்திய மூத்த நடிகைகள் சிலரின் பெயரை, இவர்களும் பாலியல் தொழில் செய்துவருவதாக கூறி வெளியிட்டதாகவும், அப்பட்டியலில் இடம்பெற்றவர்களின் பெயர் விபரங்களை படங்களுடன், வெளியிட்டது தினமலர் பத்திரிகை!
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சங்கம் சார்பில் தமிழக முதல்வரிடமும், சென்னை காவற்துறை ஆணையாளரிடமும் புகார் அளிக்கப்பட்டது.இதனடிப்படையில் காவற்துறையினர் தினமலர் செய்தி ஆசிரியர் லெனினை கைது செய்தனர்.
தமிழக அரசின் காவற்துறை இந்த நடவடிக்கைக்கு நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினி காந்த் நன்றி தெரிவித்துள்ளர்.'தினமலர் செய்தியை படித்த எனக்கே ஒரு நாள் முழுக்க எந்த வேலையும் செய்ய முடியமல் வேதனையாக இருந்தது. சம்பந்தப்பட்டவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என நான் ரொம்ப கவலைப்பட்டேன். தற்போது ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. செய்தி வெளியிட்ட நாளிதழின் ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த விடயத்தில் அதிரடியாக நடவடிக்கை எடுத்து, கைது செய்ய உத்தரவிட்ட முதல்வர் கருணாநிதிக்கும், காவற்துறைக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். ' என நடிகர் ரஜினி காந்த் மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துரைகள்: