Advertisement



  • அமெரிக்க புலனாய்வினரின் வருகையை கண்காணிக்க இலங்கை அரசு அதிரடி நடவடிக்கை



    srilankaairport

    கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டவர்கள் தொடர்பாக தகவல்களைத் திரட்டுவதற்காக இராணுவ மற்றும் காவல்துறை புலனாய்வுப் பிரிவினர் இணைந்து விசேட பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் சி.ஐ.ஏ. புலனாய்வுப் பிரிவினர் சிலர் எதிர்வரும் பொதுத் தேர்தல் செயற்பாடுகளை ஆராய்வதற்காக இலங்கைக்கு வரத் தயாராகி வருவதாக இந்தியா மற்றும் தாய்லாந்து புலனாய்வுப் பிரிவினரிடமிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில் இந்தப் புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
    இலங்கைக்கு வரும் வெளிநாட்டவர்களில் சந்தேகத்திற்கிடமானவர்களைப் பின்தொடர்ந்து தகவல்களை சேமிப்பதே இந்தப் பிரிவை ஏற்படுத்தியதற்கான நோக்கம் எனக் கூறப்படுகிறது. கொழும்பைச் சூழவுள்ள விடுதிகளில் தங்கியிருந்த வெளிநாட்டவர்கள் சிலரை கடந்த சில தினங்களில் மேற்கூறிய புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
    இவ்வாறானதொரு புலனாய்வு வலையமைப்பு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் காலத்தில் கூட செயற்படுத்தப்படவில்லையென அரச புலனாய்வுப் பிரிவின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஷ்யாவே இப்படியான புலனாய்வுப் பிரிவை முதலில் ஏற்படுத்தியதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
    அதேநேரம் விமானநிலையத்தில் கடமையாற்றும் பிறிதொரு பிரிவினர் புலம்பெயர் தேசங்களில் இருந்து செல்லும் தமிழர்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கைகளிலிலும் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு சார்பாக செயற்பட்டவர்கள் அல்லது ஆதரவாளர்களாக இருந்தவர்களுடைய பெயர்ப்பட்டியலை புலனாய்வுப் பிரிவினர் தம்மிடம் ஒப்படைத்திருப்பதகாவும் அதில் உங்களது பெயர்களும் உள்ளடக்கப்பட்டடிருக்கின்றது எனக் கூறி அதனை சீர் செய்து நாட்டிற்கு பிரவேசிக்க அனுமதிப்பதாயின் பணம் செலவாகும் எனக் கூறி அவர்களிடம் இருக்கும் பணத்தைப் பெற்றுக் கொள்வதாகவும் பல பயணிகள் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Leave a Reply

Featured Video

Photos